Popular Posts

Sunday, September 15, 2019


உளுவின் பர்ளுகள்:

உளுவின் போது கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்கள்.

  1. முகம் கழுவுதல்:
  2. கைகளை கழுவுதல்:
  3. மஸ்ஹு செய்தல்:
  4. கால்களை கழுவுதல்:
நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -(அல்-குர்ஆன் (5:6)



1. முகம் கழுவுதல்:
நெற்றி ரோமத்திலிருந்து முகவாய்க்கட்டை வரை நீளத்திலும் ஒரு காது முதல் மறுகாது வரை அகலத்திலும் முகத்தை நன்கு கழுவுதல்.

2. கை கழுவுதல்:
இரண்டு கரங்களின் முட்டுக் கை உள்ப டநன்றாய் நீர் சொட்ட ஊற்றிக் கழுவுதல்.

3. மஸ்ஹு செய்தல்:
தலையில் நாலிலொரு பாகத்தில் தண்ணீர் நன்கு படும்படி ஈரக் கை கொண்டு துடைத்தல்.

4. கால் கழுவுதல்:
இரண்டு கால்களை கரண்டைக் உட்பட நன்றாக தேய்த்துக் கழுவுதல்.



ஷாபி மட்டும்.
5. உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.
6. இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்


உளுவின் சுன்னத்கள்


1.கிப்லாவை முன்னோக்கி உட்காருதல்.

2. ஒளு செய்கிறேன் என்று நிய்யத் செய்தல்.

3.பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தல்

4. இரு கரங்களையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்


.5.பற்களைத் தேய்த்தல்(மிஸ்வாக் செய்தல்)

6. மூன்று முறை நீரால் வாய்க் கொப்பளித்தல்.

7. வாய்க் கொப்பளிக்க தண்ணீரை வாய்க்கு செலுத்தும்போதே நாசிக்கும் செலுத்தி, சிந்தியும் கொப்பளித்தும் சுத்தம் செய்தல்.

8. முகத்தை மூன்று முறை தேய்த்துக் கழுவுதல் (தாடியுடையவர் தாடி, ரோமங்களைக் கோதிக் கழுவ வேண்டும்.)

9. வலது கையை முதலிலும் இடது கையை பிறகுமாக மும்மூன்று முறை முட்டுக்கை உள்பட தேய்த்துக் கழுவுதல்.

10. சிரசில் மூன்று முறை 'மஸ்ஹு' செய்தல். அதாவது இரு கரங்களையும் நீரில் நனைத்து நெற்றியிலிருந்து பிடரி வரை இழுத்து மீண்டும் நெற்றிவரை இழுத்து துடைத்தல்.

11.மீண்டும் தண்ணீரில் கைகனை நனைத்து, சுண்டு விரல் கொண்டு காதின் முன் பாகத்தையும் பெருவிரல் கொண்டு காதின் பின் பாகத்தையும் மூன்றுமுறை துடைத்தல்.

12. கரண்டை உட்பட வலது காலை முன்னும் இடது காலை பின்னுமாக கழுவுதல்.

13. மேற்கூறியபடி உறுப்புகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல்.

14. ஓர் உறுப்பு கழுவிக் காய்வதற்கு முன் மறு ஊறப்பைத் தொடர்ச்சியாக கழுவுதல். இந்த முறைப்படி முன் பின்னாகாமல் ஒழுங்காகச் செய்து கழுவுவதே சுன்னத்தான முறைப்படி செய்யும் ஒழுவாகும்.

Thursday, September 12, 2019

தொழுகையின் சுன்னத்துக்கள்


தொழுகையின் சுன்னத்துக்கள்:





1. தக்பீர் தஹ்ரீமாவின் போது இரு கரங்களையும் இரு காதுகள் வரை உயர்த்துவது.

2. பிறகு 'ரப்உல்யதைன்'(இரு கரங்களை உயர்த்துவுது) உடன் முதல் தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று சொல்வது

3. பிறகு 'வல்உல்யதைன்' அதாவது இரண்டு கைகளையும் ரக்கஅத்து கட்டும் போது வயிற்றில் நாபி (தொப்புள்) மீது அல்லது நெஞ்சுப்பகுதியில் வைப்பது.

4. அதன் பிறகு 'ஸுப்ஹானக்க அல்லாஹும்ம…' என்ற ஸனாவை அல்ல வஜ்ஜஹத்து ஓதுவது.

5. பிறகு 'அவூது பில்லாஹி….' என்னும் தஅவ்வுத் ஓதுவது.

6. பிறகு 'பிஸ்மில்லாஹி…' ஓதுவது.

7. ருக்கூவிலும், ஸஜ்தாக்களிலும் அதனதன் தஸ்பீஹ்களை ஓதுவது.

8. ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குப் நிலைக்குப் போகையில் 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் சொல்லி போவது.

9. ருகூவிலிருந்து எழுந்து 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' சொல்வது.

10. ருகூவுக்குப் பிறகு 'கவ்மா(நிலை) என்னும் நிறு நிலையிலும் இரு ஸஜ்தாக்களுக்குpடையில் 'ஜல்ஸா' (இருப்பு)விலும் சிறிது நேரமாவது தாமதிப்பது.

11. கஃதா இருப்பில் 'தரூது இப்றாஹீம்' ஓதுவது. அதனுடன் 'துஆ மாஸூரா 'ஓதுவது.

12. அல்ஹம்து முடிவில் ஆமீன் என்று மெதுவாக அல்லது சப்தமாக சொல்வது.

தொழுகையின் பண்புகள்

தொழுகையின் பண்புகள்


(தொழுகையில் கட்டாயம் செய்ய வேண்டியவை காரியங்கள்)



தொழுகையின் பர்ளுகள்.

1. உடல் சுத்தம்.
2. இடம் சுத்தம்.
3. உடை சுத்தம்.
4. மானத்தை மறைத்தல்.
5. நிய்யத்துசெய்தல்.
6. நேரத்தை அறிதல்.
7. கிப்லாத் திசையை அறிதல்.
8. முதல் தக்பீர் தஹ்ரீமா.
9. கியாம் நிலை நிற்பது.
10. குர்ஆன் (கிராஅத்) ஓதுதல்.
11. குனிந்து ருகூவு செய்தல்.
12. ஸஜ்தா செய்தல்.
13. 'கஃதா' இருப்பு அமர்தல்.



1. உடல் சுத்தம்: 
நஜாஸத்து, குஸ்லுக்குக் காரணமான ஜனாபத்து முதலியவைகளை விட்டும் சரீரம் சுத்தமாக இருக்க வேண்டும்.

2. இடம் சுத்தம்: 
அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

3. உடை சுத்தம்: 
சகலவிதமான அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

4. மானத்தை மறைத்தல்: 
ஆணும், பெண்ணும் தன் சரீரத்தில் ஷரீஅத்தின் பிரகாரம் எவ்வளவு மறைக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவ்வளவு மறைக்க வேண்டும்.

5.நிய்யத்துசெய்தல்: 
 இன்ன நேரத்து தொழுகை இத்தனை ரக்அத்து என்று நிய்யத்து செய்ய வேண்டும்.

6. நேரத்தை அறிதல்: தொழுகையின் நேரங்களை அறிந்திருக்க வேண்டும்.

7. கிப்லாத் திசையை அறிதல்: கிப்லாவின் திசை இன்னதென்று திண்ணமாக அறிந்திருக்க வேண்டும்.




#தொழுகையின் #பர்ளுகள்.
உலக அளவில் எவ்வித மாற்றமின்றி அனைத்து முஸ்லிம் களாலும் ஒற்றுமையாக நிறைவேற்றப்படுகிறது.
நம்முடைய சண்டைகள் அனைத்தும் #சுன்னத்தான விடயங்களில் தான்.
#நபிவழி சுன்னத்தில் மட்டுமே உலகளவில் மாற்றங்களும் உள்ளது.
ஒன்றைத் தெரிந்து கொள்வோம். ஒருக்காலும் அனைத்து சுன்னத்களையும்....ஒருவரால் ஒரே நேரத்தில் கடைபிடிக்க முடியவே முடியாது. 

எனவேதான் நான்கு (வழிச்சாலைகள்) #மத்ஹப்கள் உருவாக்கப்பட்டுள்ளது.*

தொழுகையின் வாஜிபுகள்:


  1. ஸூரத்துல் பாத்திஹா-அல்ஹம்து சூரா ஓதுதல்
  2. துனை சூரா அல்லது மூன்று ஆயத்துக்களை சேர்த்து ஓதுதல்.
  3. முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் கிராஅத்தை சேர்த்து ஓதுதல்.
  4. ஒவ்வொரு 'ருக்னு'(செயல்களையும் நிதானமாகச் செய்தல்.
  5. முதலாவது இரண்டு ரக்அத்துக்குப் பின் (கஃதா) இருப்பு அமர்வது.
  6. இரண்டு கஃதா இருப்புகளிலும் அத்தஹிய்யாத் ஓதுதல்.
  7. முடிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது.
  8. வித்ரு (வாஜிபு) தொழுகையில் குனூத் ஓதுவது.
  9. இரண்டு ஈது தொழுகையில் அதிகமாக ஆறு தக்பீர்கள் சொல்வது.
  10. சப்தமிட்டு ஓத வேண்டிய சமயங்களில் சப்தமிட்டு ஓதுவது.
  11. மெதுவாக ஓத வேண்டிய சமயங்களில் மெல்ல ஓதுவது.
  12. முதலில் ருக்கூஃவும் பிறகு ஸஜ்தாவும் முறையே செய்வது.
  13. ஒவ்வொரு காரியங்களையும் தர்தீபாக –ஒழுங்காக செய்வது முன்பின் ஆகாமால் நிறைவேற்றுவது).

Monday, September 9, 2019

து.ஆ



اللـهـــم
إني أعوذ بك من هم يحزنني ومن فكر يقلقني
اللـهــم
إني أعوذ بك من ضيق الصدر
ومن شتات الأمر ومن العسر بعد اليسر

 யா அல்லாஹ்!



என்னை கவலைக்குள்ளாக்கும் துக்கத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

மன அழுத்தத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

என் காரியங்கள்சிதறுண்டு போவதிலிருந்தும்

இலகுக்குப் பின் சிரமம் ஏற்படுவதிலிருந்து ம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்!எனது இம்மை,மறுமை,எனது குடும்பம்,எனது செல்வம் ஆகியவற்றில் ஆரோக்கியத்தையும்,மன்னிப்பையும் கேட்கிறேன்

யா அல்லாஹ்!எனதுகுற்றம்,குறைகளை மூடி மறைப்பாயாக!

எனது அச்சத்தை அச்சமின்மையைக் கொண்டு மாற்றுவாயாக!

எனது ரப்பே! எனக்கு முன்புறமிருந்தும்,என் பின் புறமிருந்தும்.எனது வலப்பக்கமிருந்தும், இடப்பக்கமிருந்தும், மேலிருந்தும், என்னைக் காப்பாற்றுவாயாக!

திடீரென எனக்கு கீழிலிருந்து பூமியிலிருந்து ஏற்படும் ஆபத்துகளிலில் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உன் கண்ணியத்தை முன்னுருத்தி உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்




ஆமீன்

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்


ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
ஆஷூரா நோன்பு ஏன்?
நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) யிடம், “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டாடியிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3) என்ற திரு வசனம் தான் அது)” அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)” என்றார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி) நூல்: புகாரி (45)
யூதர்கள் பெருநாளாக கொண்டாடியிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டியிருக்கிறார்கள்.
அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரி 2005, 2006
கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெருநாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: முஸ்லிம் 1913
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006
நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம்.
இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன. இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?
சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹ்மத் 2047, பைஹகீ
இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.
குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல்

  1. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.
ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
நூல்: முஸ்லிம் 1919
சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

♣ ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ


♣ ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ
اَللهم يَاقَابِلَ تَوْبَةِ آدَمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا رَافِعَ إِدْرِيْسَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُسَكِّنَ سَفِيْنَةِ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْم عَاشُوْرَاءَ َ
وَيَا مُنَجِّيَ إِبْرَاهِيْمَ مِنْ نَارِ نُمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاكَاشِفَ ضُرِّ أَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَافَارِجَ كُرْبَةِ ذِي النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاغَافِرَ ذَنْبِ دَاؤُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسَى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَازَائِدَ الْخَضِرِ فِى عِلْمِهِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُنَزِّلَ التَّوْرَاةِ وَالزَّبُوْرِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ
عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّلوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَوْمَ عَاشُوْرَاء


اَللهم إِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ، وَادْفَعْ عَنَّا السَّيِّئآتِ وَالْبَلِيَّاتِ، يَادَافِعَ الْسَيِّئآتِ وَالْبَلِيَّاتِ، وَسَلِّمْنَا مِنْ آفَاتِ الدُّنْيَا وَفِتَنِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَآلَامِهَا وَشِدَّاتِهَا وَفَقْرِهَا وَمِنْ آفَاتِ الْآخِرَةِ وَعَذَابِهَا وَأَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ الثَّقَلَيْنِ وَرُسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدٍ الْمُصْطَفَى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَامَالِكَ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ سَيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ أَبِيْ مُحَمَّدٍ الْحَسَنِ وَأَبِيْ عَبْدِ اللهِ الْحُسَيْنِ، اَللهم زِدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا، وَ;>  وَ  

அலையில் சிக்கிய அரசன் அழிந்து போன வரலாறு


அலையில் சிக்கிய அரசன் அழிந்து போன வரலாறு....




ஃபிா்அவ்ன் - அமாலிக்கா அரசப்பரம்பரையில் வந்த 11 எகிப்து நாட்டு அரசா்களின் புனைப் பெயா்
பெரும்பாலும் அவா்கள் கொடுங்கோலா்களாக இருந்ததால் கொடுங்கோலா்களுக்கே ஃபிா்அவ்ன் என்று சொல்வதுண்டு

இஸ்ரவேலா்களை கொடுமைப் படுத்தி வந்த ஃபிா்அவ்னின் இயற்பெயா் வலீத் பின் முஸ்அப் பின் ரய்யான் என்று சொல்லப்படுகிறது
வேதாகமங்களில்  பாா்வோன் என்றும்
வரலாற்றாசிரியா்கள் இவனை  இரண்டாம் ரம்சேஸ் (Ramses || )
என்றும் குறிப்பிடுவா்

நபி மூஸா ( அலை) அவா்களின் காலத்தில் கி மு 15 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்தான்

இஸ்ரவேலா்களில் ஓா் ஆண்மகன் பிறந்து அவா் கரத்தால் தனது ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்று ஃபிா்அவ்ன் அறிந்த செய்தியால் அவன் பீதியடைந்தான் ஆகவே இஸ்ரவேலா்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொலை செய்திடுமாறு தன் ஆட்களுக்கு ஆணையிட்டுருந்தான்

அப்படியிருந்தும் இஸ்ரவேலா்களின் குடும்பத்தில் பிறந்த மூஸா ( அலை) அவா்கள் இறைவனால் பாதுகாக்கப்பெற்று
ஃபிா்அவ்னின் மாளிகையிலே வளா்ந்து ஆளானாா்கள்

*உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்);

அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்;
அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்;
(அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்;
இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்;

நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”
(என்று அவனிடம் கூறப்பட்டது).

ஃபிா்அவ்ன் எனும் இரண்டாவது ரம்சேஸின் சடலம் எகிப்தில் தைருல் பஹ்ரீ பகுதியில் கி.பி 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது பின்னா் கெய்ரோ அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி அறையில் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

அல்குா்ஆன் 2:49.10:90-92
தஃப்சீா் இப்னு கஸீா் 1/ பக்கம் 160 4/ பக்கம் 556




Sunday, September 1, 2019


அல்லாஹ்வே உன்னால்  செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.

  அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வே உன்னால்  செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.
        சுட்டெரிக்கும் நெருப்பை இப்ராஹிம் நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக
குளிரவைத்தவனே!
       ஆர்பரிக்கும் ஆழ் கடலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்காப்பாற்ற
இரண்டாக பிளக்கவைத்தவனே
       எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து
தலைமுடி நரைத்த நிலையில் மலடி யான
என் மனைவியின் மூலம் எனக்கு ஒரு வாரிசை தா "என மனமுருகி கேட்ட நபி
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாத்திற்கு
குழந்தை செல்வத்தை வழங்கியவனே!

ஸவ்ர் குகையில் எங்கள் கண்மணி நபிகள் நாயகம்ﷺ அவர்களை காத்தவனே!
ஆட்சி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி  இப்பூமியில் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கியவனே!
          உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!

அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க நல்லுதவி செய்வாயாக!

      பொருளாதார சிக்கலினால் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்போருக்கு உதவி செய்வாயாக!
 எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு மத்தியில் நல்லுறவு நிகழச்செய்வாயாக!

என்றேன்றும் உனக்குக் கட்டுபட்டு வாழும் நல்லடியர்களாக எங்களை வாழ வைப்பாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

ஆமீன்

Friday, August 30, 2019

துஆ கேட்கும் முறை
நபிமார்கள் காட்டும் வழி
முதலில் பாவமன்னிப்பு கேளுங்கள்
:____::_=_::___
-
 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
38:35. “என் இரட்சகனே என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
இது நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆ

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு ஆட்சி  வேண்டும் எனகேட்கும் முன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு
கேட்கிறார்கள்..
காரணம் நாம் செய்யும் பாவம்தான் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்காமல் தடுப்பது,

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் பாவமன்னிப்புடன் தான் துஆ கேட்டுள்ளார்கள்

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏
71:28. “என் இரட்சகனே எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

7:151 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ‌ۖ  وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
7:151. “என் இரட்சகனே என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏
நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.  7:155

நபி இப்ராகிம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ‏
14:41. “எங்கள் இரட்சகனே என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்)
.
நமது நபிமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்களுக்கு அல்லாஹ் கற்று கொடுதத துஆ

23:118 وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏
23:118. இன்னும், “என் இரட்சகனே நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏
எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” 3:193.

يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْ
அவர்கள் “எங்கள் இரட்சகனே எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

நமது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அதிகமாக ரப்பே என்னை மன்னிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக “என அதிகமாக துஆ செய்து கொண்டிருப்பார்கள்

எனவே நாம் அல்லாஹ்விடம் நமது தேவைகளை கேட்கும்போது அதிகமாக இஸ்திஃபார் செய்தும் துஆ விலும் பாவமன்னிப்பும் கேட்டு
அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும்.

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 
“யா அல்லாஹ்!! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”.
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”.
 26:83-85, 87

 رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. 27:19

رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ 
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10

Thursday, August 29, 2019

துஆ கேட்கும் முறை

துஆ கேட்கும் முறை
 நபிமார்கள் காட்டும் வழி

அல்லாஹ் விடம் உங்களின் தேவைகள்,எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தயக்கமின்றி நம்பிக்கையுடன் கேளுங்கள்.

நபி மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரே நேரத்தில்  அல்லாஹ்விடம் எத்துனை கோரிக்கைகள் வைக்கிறார்கள் பாருங்கள்.

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
1.  "என் ரப்பே! என் உள்ளத்தைத்  திடப்படுத்திவிரிவாக்குவாயாக|

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
2.என் காரியங்களை எனக்குச்  சுலபமாக்கி வைப்பாயாக!

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
 3.என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடுவாயாக!

يَفْقَهُوْا قَوْلِیْ ‏ 
4. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய்வாயாக!

وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏ 
5.என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி (மந்திரியாக்கி) வைப்பாயாக!

هٰرُوْنَ اَخِى ۙ‏ 
6.அவர் என்னுடைய சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.

اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏ 
7.அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வைப்பாயாக!

وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ‏ 
 8.என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வைப்பாயாக

كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ‏ 
நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம்.

وَّنَذْكُرَكَ كَثِيْرًا ‏ 
(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம்.

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا‏ 
எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார்.

ஒரே நேரத்தில் மூஸாநபி அவர்கள் தன்னுடைய தேவைகளை ஒரே துஆவில் கேட்கிறார்கள்
அதற்கு அல்லாஹ் கூறிய பதில்

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏  "
மூஸாவே! நீங்கள் கேட்ட #யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன,
(அல்குர்ஆன் : 20:36)

ஆம் ! ஒரே துஆவில்  அல்லாஹ்விடம் உங்கள் தேவை எவ்வளவு இருந்தாலும் கேளுங்கள்.

அல்லாஹ் நாடினால் ஒரே நொடியில் அதை நிறைவேற்றுவான்

அதே நேரத்தில் என் தேவைகள் நிறைவேறினால் உன்னை அதிகமாக புகழ்வேன் நன்றி செலுத்துவேன் என்ற வாக்குறுதியையும்  அல்லாஹ்விற்கு
அளியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் செவிமெடுப்பான்.

து.ஆ

யாஅல்லாஹ்! ,,வாழ்வாதாரங்களை வாரி வழங்குபவனே!

எங்களுக்கு உன்னுடைய வாழ்வாதரங்களின் வாசல்களை திறந்துவிடுவாயாக!

எங்கள் காரியங்கள் அனைத்தையும் லேசாக்குவாயாக!

எங்களின் பாவங்களையும், எங்கள் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னிப்பாயாக!

எங்களின் கவலைகளை போக்குவாயாக!
எங்கள் நோய்களை குணப்படுத்துவாயாக!
எங்கள் குடும்பத்தில் மறைந்து விட்டவர்களின் மீது இரக்கம் காட்டுவாயாக!

இய்யாக்க நஃபுது
வ இய்யாக நஸ்தயீன்

யா அல்லாஹ்!  எனக்கு  வேதனை ஏற்படுத்தும் அனைத்தையும் எனக்கு  நலன் பயப்பதாக மாற்றுவாயாக!
என்னை கவலையில்
ஆழ்த்தும் அனைத்திலும் நன்மையை உருவாக்குவாயாக!
 எனக்குக் கிடைக்காமல் நீ தடுத்த அனைத்திலும் எனக்கு நன்மையை ஏற்படுத்தித் தருவாயாக!
ஆமீன்


Wednesday, August 28, 2019

சிரமங்கள்,சங்கடங்கள் ஏற்படும் போது நபியவர்கள்ﷺ ஓதியது

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 
லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் 

 அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ
عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ 

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.

   யா அல்லாஹ் !நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை. 

(ஆதாரம் : அபூதாவூத்,அஹ்மத்)

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ 
லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன்

   வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

(ஆதாரம் : திர்மிதி)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
அல்லாஹு அல்லாஹு ரப்பி லா உஷ்ரிக் பிஹி ஷைஆ

  அல்லாஹ்! அல்லாஹ்வே என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன். 

(ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா)

Sunday, June 23, 2019

ஹஜ்- இறுதிக்கடமை.



உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.


*♨ தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம்*

*♦சென்னை : தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர்.*

*♦அரசு ஒதுக்கீட்டின் கிழ் இந்த ஆண்டு 4394 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் நிலோபர் கமில் தகவல் தெரிவித்துள்ளார்.*

*♦இடஒதுக்கீடு பெறாமல் தனியார் மூலமாக 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஐந்து குழுக்களாக ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.*





இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஆண்டுதோறும்   கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதேபோல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளனர்.

இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான ஹாஜிகள்  ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.


இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்கள் அடங்கியுள்ளன. இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையிலும் அபூர்வமான, ஆச்சரியமான, தத்துவரீதியான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம் ‘ஹஜ் பயணம் கடமையாக்கப்பட்டதற்கு பலவிதமான தத்துவ காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.

புனித ‘மக்கா’ சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வது ‘ஹஜ்’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.

‘இன்னும் அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்தல் அதன்பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’ என்பது திருக்குர்ஆன் (3:97) வசனமாகும்.

புனித ஹஜ் பயணம் தொடர்பான நபிமொழிகள் வருமாறு:-

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமை இல்லை) என பதிலளித்தார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி).

“ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அமர் பின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்)

“ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டில் ஒன்றை மற்றொன்றோடு பின்பற்றுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு ஆகியவைகளின் அழுக்குகளை கொல்லனின் நெருப்பு போக்குவது போன்று, அவ்விரண்டும் ஏழ்மை மற்றும் பாவத்தையும் போக்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி)

“ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால், அதை அவன் ஏற்றுக் கொள்கிறான், இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால், அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ, இப்னுமாஜா)

“ஹஜ் பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப்பாதையில் ஏழுநூறு மடங்கு செலவு செய்வதைப் போன்று ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல் : அஹ்மது)

இஸ்லாமியக் கடமைகளை நான்கு விதமாக கூறலாம். 1) உள்ளம் சார்ந்தது. இதுதான் அடிப்படை. இதற்கு ஈமான் (இறை நம்பிக்கை) என இஸ்லாம் கூறுகிறது.

2) உடல் சார்ந்தது. இது தொழுகை மற்றும் நோன்பை குறிக்கிறது.

3) பொருள் சார்ந்தது. இது ஜகாத் மற்றும் ஸதகா, அன்பளிப்பு, வக்ப், அழகிய கடன் போன்ற பொருளாதாரம் சார்ந்த கடமைகளை குறிக்கிறது.

4) உடல் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கடமை தான் புனித ஹஜ் எனும் கடமையாகும். உடல் பலமும், பணபலமும் ஒன்று சேர பெற்றவர்களுக்குத்தான் ஹஜ் கடமை. இரண்டு தகுதிகளையும் பெறாதவர் அல்லது இரண்டில் ஒரு தகுதியை பெறாதவர் மீது ஹஜ் கடமையாகாது.

இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் தெளிவுபடுத்துகிறது.

“அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை” (திருக்குர்ஆன் 3:97)

ஹஜ் என்பது உள்ளம் ஆசைப்படும் வணக்கம், உயிரோட்டமான வணக்கம். அது ஒரு உலக மகாநாடு. அங்கு சகோதரத்துவம் வெளிப்படுகிறது, சமாதானம் நிலவுகிறது. அன்பு பெருகுகிறது, அமைதி நிலவுகிறது.

தேசம், இனம், மொழி, நிற வேறுபாடுகளைக் களைந்து ஒரேவிதமான வெண்மை நிற சீருடைகளை அணிந்து இறையில்லத்தில் கூடி தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

பல உள்ளார்ந்த தத்துவங்களை புனித ஹஜ் பயணம் எடுத்துரைக்கிறது. இத்தகைய தத்துவங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் தமது உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி இஸ்லாமும் விரும்புகிறது. அதுவே இறைவனின் விருப்பமும், இறைத்தூதரின் விருப்பமும் ஆகும்.






தல்பியா

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதன் தன்னுடைய ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை சித்ர் என்ற மர இலை கொண்டும், தண்ணீர் கொண்டும் கழுவி, இரண்டு இஹ்ராம் துண்டுகளுடன் கபனிடுங்கள், அவரது தலையை மூடவும் வேண்டாம், அவருக்கு நறுமணங்கள் இடவும் வேண்டாம் என்று கூறினார்கள். தல்பியாக் கூறியவாறே இவர் மறுமை நாளில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார் எனவும் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம் மற்றும் இப்னு ஹுஸைமா).
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யாரொருவர் தல்பியாக் கூறுகின்றாரோ அவருக்காக கல்லும், மரமும் அல்லது அவருக்கு இடப்புறமும் வலப்புறமும் பூமியில் உள்ள அனைத்தும் அவருடன் இணைந்து தல்பியாக் கூறுகின்றன. (அத்திர்மிதி, இப்னு மாஜா, மற்றும் அல் பைஹக்கி). 

கறுப்புக் கல்

அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கின்றேன், கறுப்புக் கல்லையும், எமனி முனையையும் தொடுவது பாவங்களைப் போக்கி விடும். (அஹ்மது)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கறுப்புக் கல்லைப் பற்றி முஹம்மது (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்று அறிவிக்கின்றார்கள் :
இறைவன் மீது சத்தியமாக! மறுமைநாளிலே பார்க்கக் கூடிய இரண்டு கண்களைக் கொண்டும், பேசக் கூடிய நாக்கைக் கொண்டும், அதனை யார் வாய்மையுடன் தொட்டார்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு கறுப்புக் கல்லை இறைவன் எழும்பச் செய்வான். (அத்திர்மிதி)
இங்கே வாய்மையுடன் என்பது இறைவனுக்குக் கீழ்ப்படிந்த நிலையிலும், முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னத்தைப் பேணிய நிலையிலும் அதனைத் தொட்டார்களா என்பதனை அறிவதற்காகத் தானே தவிர வெறுமனே ஒரு கல்லைத் தொடுவது போல தொட்டதற்காக அல்ல என்று ஷேக் அல்-அல்பானி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அறிவிக்கின்றார்கள் : இந்தக் கறுப்புக் கல் பாலை விட வெண்மையான நிறத்தில் சொர்க்கத்திலிருந்து இறங்கியது, ஆதம் (அலை) அவர்களது சந்ததிகள் செய்த பாவத்தின் காரணமாக அது கறுப்பாகி விட்டது. (அத்திர்மிதி)

தலைமுடிகளைக் களைவது
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
 யா அல்லாஹ்! யார் தங்களது தலைமுiடியை மழித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு உன்னுடைய மன்னிப்பை வழங்குவாயாக! என்று கூறிய பொழுது அங்கிருந்தவர்கள்;, தலைமுடிகளைக் குறைத்துக் கொண்டவர்கள் பற்றிக் கேட்டார்கள், முஹம்மது (ஸல்) அவர்கள், யா அல்லாஹ்! தங்கள் தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்களுக்கும் உன்னுடைய மன்னிப்பை வழங்குவாயாக! (என்று பிரார்த்தனை புரிந்தார்கள்). (மீண்டும்) தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்கள் பற்றிக் கேட்ட பொழுது, தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்களுக்கும்! என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இன்னும் பல..)
முஹம்மது (ஸல்) தலைமுடியைக் களைவது பற்றிக் கூறியதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றபடி, தலைமுடிகளைக் களைவது என்பது நீங்கள் ஒரு நற்செயலைச் செய்ததற்கான கூலியைப் பெற்றுத் தரக் கூடியது, மற்றும் உங்களது பாவங்களைப் போக்கக் கூடியது.

ஜம்ஜம் தண்ணீர்

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இந்தப் பூமியில் உள்ள நீர்களிலேயே மிகச் சிறந்தது ஜம்ஜம் தண்ணீர் ஆகும். அதில் (உடலுக்குத் தேவையான மாற்று) உணவும், ஆரோக்கியத்திற்குத் தேவையானது (சுகமு)ம் இருக்கின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஜம் ஜம் தண்ணீரை எதற்காக அருந்துகின்றீர்ளோ, அதனை அது குணப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. (அத்தாரகுத்னீ, அல் பைஹக்கி).
இதன் அர்த்தம் என்னவென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு, அவர்களுடன் செய்யக் கூடிய இந்த ஒரு ஹஜ் மட்டுமே போதுமானது என்று வரையறுத்து விட்டார்கள் என்பதாகும். எனவே, இது ஒன்றே முஸ்லிம் உம்மத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பொருந்துவதாகும்.

முன்னெச்சரிக்கை அல்லது நினைவூட்டல்கள்

ஹஜ்ஜிற்கான இஹ்ராம் ஆடையை அணிந்து விட்டு ஹஜ்ஜிற்காக தயாராகி விட்ட முஸ்லிம்கள், ஹஜ்ஜிற்கான ஆயத்தத்தில், அதன் கிரியைகளில் அல்லது அதன் சிறப்பு வணக்க வழிபாடுகளில் நாம் நுழைந்து விட்டோம் என்பதை மறந்து விடுகின்றார்கள். அந்த ஆடையை அணிந்த மாத்திரத்திலே ஹஜ்ஜின் பொழுது இறைவன் எவற்றை எல்லாம் தடை செய்திருக்கின்றானோ அவை யாவும் அப்பொழுது முதல் அமுலுக்கு வந்து விடுகின்றது என்பதும், இன்னும் ஹஜ்ஜுச் செய்யாத முஸ்லிம்களின் மீது என்னென்ன தடைகள் உள்ளனவோ அவை சேர்த்தே அமுலுக்கு வந்து விடுகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள். எனவே, ஹஜ் செய்து விட்டுத் திரும்புகின்ற அவர்களிடம், ஹஜ்ஜுக்கு முன்பு என்னென்ன குறைகள் காணப்பட்டனவோ அதைப் போன்ற குறைகளுடனேயே அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புகின்றார்கள். இது ஒன்றே போதுமானதாகும் அவர்கள் செய்து திரும்பி இருக்கின்ற ஹஜ் அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும், அவர்கள் செய்திருக்கின்ற ஹஜ்ஜும் சரியாகச் செய்யப்படவில்லை என்பது நமக்குத் தெரிய வரும். ஏன் அவர்கள் செய்திருக்கின்ற ஹஜ் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பி விடப்பட்டிருக்கக் கூடாது என்ற எண்ணம் தான் நமக்கு மேலிடுகின்றது. எனவே, என்னருமைச் சகோதர சகோதரிகளே, இறைவனது வரையறைகளைப் பேணி நடக்கவும், அவனது வரையறைகளை மீறாமல் வாழவும் நீங்கள் உங்களது முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பாடுபடுங்கள். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்படப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. (2:197)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(ஹஜ்ஜின் பொழுது தடைசெய்யப்பட்ட) உடலுறவு போன்ற பாலியல் குற்றங்களைப் புரியாமலும், அல்லது பாவமான காரியங்களில் ஈடுபடாமலும் இருப்பார்களானால், அவர்கள் அன்று பிறந்த பாலகர்களைப் போல தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள். (புகாரி, முஸ்லிம்).

ரியாஜிகள் பேரவை
ரியாலுள் ஜினான் அரபிக் கல்லூரி 
திருநெல்வேலி பேட்டை






Thursday, June 20, 2019

தண்ணீருக்கான போர்

தண்ணீருக்கான போர்


தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!





தற்போது உலகின் தலையாய பிரச்னைகளில் ஒன்று. நாட்டுக்காகவும்-மொழிக்காகவும்-இனத்திற்காகவும் - மதத்திற்காகவும் மக்கள் சண்டை இட்டுக் கொண்டது பழைய காலம்.

 இனி தண்ணீருக்கான போரை உலகம் காணப்போகிறது.
ஐ.நா.வின் பொருளியல் - சமூக குழுமத்தின் ஆய்வுப்படி உலகில் 70 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கின்றனர். 1995ம் ஆண்டு மக்கள்தொகை 7 பில்லியனாக இருந்தபோது 100க்கு 88 பேருக்கு போதுமானதாக இருந்த குடிநீர், 2025-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 80 பில்லியனாக உயரும்பட்சத்தில் 100க்கு 57 பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீராகும். அதில் 30 சதவீதம் ஏரி, ஆறுகளிலும் 30 சதவீதம் நிலத்தடி நீராகவும், 70 சதவீதம் பனிப்பாறைகளாகவும் உள்ளன.

ஆண்டுதோறும் உலகில் 5 மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயால் இறந்து விடுகின்றனர். இது போரில் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகம். இந்தியாவில் தனிநபருக்கான குடிநீரின் இருப்பு 1950ல் 5000 கன மீட்டராகும். அது தற்போது 2000 கனமீட்டராகக் குறைந்துவிட்டது.
இந்தியாவில் ஆந்திரம், அசாம், பிகார், சண்டீகர், தில்லி, குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் ஆண்டுக்கு 4 மீ. அளவுக்குக் குறைந்து கொண்டே போகிறது.

சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.


தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும்.

‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)

தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணா கிறது.

உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டு கிறது.

உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரு கிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.

இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்து கள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.

தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுகுறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘உங்கள் பிள்ளைகளை யாசகர் களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது’ என்றார்கள்.

இது நம் குடும்ப உறுப்பினர்களுக் கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது, வருங்கால சந்ததிகளை எவ்வகையிலும் ஏழைகளாகவோ அல்லது இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாதவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய சமுதாய பொறுப்பாகும்.

எனவே, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த சந்ததிகளும் பயன்படுத்த விட்டுக்கொடுப்போம்.

அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.

தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக் கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!

தொகுப்பு:

ரியாஜிகள் பேரவை, 
திருநெல்வேலி- பேட்டை.