Popular Posts

Sunday, September 15, 2019


உளுவின் பர்ளுகள்:

உளுவின் போது கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்கள்.

  1. முகம் கழுவுதல்:
  2. கைகளை கழுவுதல்:
  3. மஸ்ஹு செய்தல்:
  4. கால்களை கழுவுதல்:
நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -(அல்-குர்ஆன் (5:6)



1. முகம் கழுவுதல்:
நெற்றி ரோமத்திலிருந்து முகவாய்க்கட்டை வரை நீளத்திலும் ஒரு காது முதல் மறுகாது வரை அகலத்திலும் முகத்தை நன்கு கழுவுதல்.

2. கை கழுவுதல்:
இரண்டு கரங்களின் முட்டுக் கை உள்ப டநன்றாய் நீர் சொட்ட ஊற்றிக் கழுவுதல்.

3. மஸ்ஹு செய்தல்:
தலையில் நாலிலொரு பாகத்தில் தண்ணீர் நன்கு படும்படி ஈரக் கை கொண்டு துடைத்தல்.

4. கால் கழுவுதல்:
இரண்டு கால்களை கரண்டைக் உட்பட நன்றாக தேய்த்துக் கழுவுதல்.



ஷாபி மட்டும்.
5. உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.
6. இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்


உளுவின் சுன்னத்கள்


1.கிப்லாவை முன்னோக்கி உட்காருதல்.

2. ஒளு செய்கிறேன் என்று நிய்யத் செய்தல்.

3.பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தல்

4. இரு கரங்களையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்


.5.பற்களைத் தேய்த்தல்(மிஸ்வாக் செய்தல்)

6. மூன்று முறை நீரால் வாய்க் கொப்பளித்தல்.

7. வாய்க் கொப்பளிக்க தண்ணீரை வாய்க்கு செலுத்தும்போதே நாசிக்கும் செலுத்தி, சிந்தியும் கொப்பளித்தும் சுத்தம் செய்தல்.

8. முகத்தை மூன்று முறை தேய்த்துக் கழுவுதல் (தாடியுடையவர் தாடி, ரோமங்களைக் கோதிக் கழுவ வேண்டும்.)

9. வலது கையை முதலிலும் இடது கையை பிறகுமாக மும்மூன்று முறை முட்டுக்கை உள்பட தேய்த்துக் கழுவுதல்.

10. சிரசில் மூன்று முறை 'மஸ்ஹு' செய்தல். அதாவது இரு கரங்களையும் நீரில் நனைத்து நெற்றியிலிருந்து பிடரி வரை இழுத்து மீண்டும் நெற்றிவரை இழுத்து துடைத்தல்.

11.மீண்டும் தண்ணீரில் கைகனை நனைத்து, சுண்டு விரல் கொண்டு காதின் முன் பாகத்தையும் பெருவிரல் கொண்டு காதின் பின் பாகத்தையும் மூன்றுமுறை துடைத்தல்.

12. கரண்டை உட்பட வலது காலை முன்னும் இடது காலை பின்னுமாக கழுவுதல்.

13. மேற்கூறியபடி உறுப்புகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல்.

14. ஓர் உறுப்பு கழுவிக் காய்வதற்கு முன் மறு ஊறப்பைத் தொடர்ச்சியாக கழுவுதல். இந்த முறைப்படி முன் பின்னாகாமல் ஒழுங்காகச் செய்து கழுவுவதே சுன்னத்தான முறைப்படி செய்யும் ஒழுவாகும்.

No comments:

Post a Comment