தொழுகையின் சுன்னத்துக்கள்:
1. தக்பீர் தஹ்ரீமாவின் போது இரு கரங்களையும் இரு காதுகள் வரை உயர்த்துவது.
2. பிறகு 'ரப்உல்யதைன்'(இரு கரங்களை உயர்த்துவுது) உடன் முதல் தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று சொல்வது
3. பிறகு 'வல்உல்யதைன்' அதாவது இரண்டு கைகளையும் ரக்கஅத்து கட்டும் போது வயிற்றில் நாபி (தொப்புள்) மீது அல்லது நெஞ்சுப்பகுதியில் வைப்பது.
4. அதன் பிறகு 'ஸுப்ஹானக்க அல்லாஹும்ம…' என்ற ஸனாவை அல்ல வஜ்ஜஹத்து ஓதுவது.
5. பிறகு 'அவூது பில்லாஹி….' என்னும் தஅவ்வுத் ஓதுவது.
6. பிறகு 'பிஸ்மில்லாஹி…' ஓதுவது.
7. ருக்கூவிலும், ஸஜ்தாக்களிலும் அதனதன் தஸ்பீஹ்களை ஓதுவது.
8. ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குப் நிலைக்குப் போகையில் 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் சொல்லி போவது.
9. ருகூவிலிருந்து எழுந்து 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' சொல்வது.
10. ருகூவுக்குப் பிறகு 'கவ்மா(நிலை) என்னும் நிறு நிலையிலும் இரு ஸஜ்தாக்களுக்குpடையில் 'ஜல்ஸா' (இருப்பு)விலும் சிறிது நேரமாவது தாமதிப்பது.
11. கஃதா இருப்பில் 'தரூது இப்றாஹீம்' ஓதுவது. அதனுடன் 'துஆ மாஸூரா 'ஓதுவது.
12. அல்ஹம்து முடிவில் ஆமீன் என்று மெதுவாக அல்லது சப்தமாக சொல்வது.
No comments:
Post a Comment