Popular Posts

Friday, August 30, 2019

துஆ கேட்கும் முறை
நபிமார்கள் காட்டும் வழி
முதலில் பாவமன்னிப்பு கேளுங்கள்
:____::_=_::___
-
 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
38:35. “என் இரட்சகனே என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
இது நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆ

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு ஆட்சி  வேண்டும் எனகேட்கும் முன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு
கேட்கிறார்கள்..
காரணம் நாம் செய்யும் பாவம்தான் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்காமல் தடுப்பது,

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் பாவமன்னிப்புடன் தான் துஆ கேட்டுள்ளார்கள்

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏
71:28. “என் இரட்சகனே எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

7:151 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ‌ۖ  وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
7:151. “என் இரட்சகனே என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏
நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.  7:155

நபி இப்ராகிம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ‏
14:41. “எங்கள் இரட்சகனே என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்)
.
நமது நபிமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்களுக்கு அல்லாஹ் கற்று கொடுதத துஆ

23:118 وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏
23:118. இன்னும், “என் இரட்சகனே நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏
எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” 3:193.

يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْ
அவர்கள் “எங்கள் இரட்சகனே எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

நமது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அதிகமாக ரப்பே என்னை மன்னிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக “என அதிகமாக துஆ செய்து கொண்டிருப்பார்கள்

எனவே நாம் அல்லாஹ்விடம் நமது தேவைகளை கேட்கும்போது அதிகமாக இஸ்திஃபார் செய்தும் துஆ விலும் பாவமன்னிப்பும் கேட்டு
அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும்.

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 
“யா அல்லாஹ்!! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”.
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”.
 26:83-85, 87

 رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. 27:19

رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ 
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10

Thursday, August 29, 2019

துஆ கேட்கும் முறை

துஆ கேட்கும் முறை
 நபிமார்கள் காட்டும் வழி

அல்லாஹ் விடம் உங்களின் தேவைகள்,எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தயக்கமின்றி நம்பிக்கையுடன் கேளுங்கள்.

நபி மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரே நேரத்தில்  அல்லாஹ்விடம் எத்துனை கோரிக்கைகள் வைக்கிறார்கள் பாருங்கள்.

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
1.  "என் ரப்பே! என் உள்ளத்தைத்  திடப்படுத்திவிரிவாக்குவாயாக|

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
2.என் காரியங்களை எனக்குச்  சுலபமாக்கி வைப்பாயாக!

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
 3.என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடுவாயாக!

يَفْقَهُوْا قَوْلِیْ ‏ 
4. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய்வாயாக!

وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏ 
5.என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி (மந்திரியாக்கி) வைப்பாயாக!

هٰرُوْنَ اَخِى ۙ‏ 
6.அவர் என்னுடைய சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.

اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏ 
7.அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வைப்பாயாக!

وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ‏ 
 8.என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வைப்பாயாக

كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ‏ 
நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம்.

وَّنَذْكُرَكَ كَثِيْرًا ‏ 
(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம்.

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا‏ 
எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார்.

ஒரே நேரத்தில் மூஸாநபி அவர்கள் தன்னுடைய தேவைகளை ஒரே துஆவில் கேட்கிறார்கள்
அதற்கு அல்லாஹ் கூறிய பதில்

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏  "
மூஸாவே! நீங்கள் கேட்ட #யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன,
(அல்குர்ஆன் : 20:36)

ஆம் ! ஒரே துஆவில்  அல்லாஹ்விடம் உங்கள் தேவை எவ்வளவு இருந்தாலும் கேளுங்கள்.

அல்லாஹ் நாடினால் ஒரே நொடியில் அதை நிறைவேற்றுவான்

அதே நேரத்தில் என் தேவைகள் நிறைவேறினால் உன்னை அதிகமாக புகழ்வேன் நன்றி செலுத்துவேன் என்ற வாக்குறுதியையும்  அல்லாஹ்விற்கு
அளியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் செவிமெடுப்பான்.

து.ஆ

யாஅல்லாஹ்! ,,வாழ்வாதாரங்களை வாரி வழங்குபவனே!

எங்களுக்கு உன்னுடைய வாழ்வாதரங்களின் வாசல்களை திறந்துவிடுவாயாக!

எங்கள் காரியங்கள் அனைத்தையும் லேசாக்குவாயாக!

எங்களின் பாவங்களையும், எங்கள் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னிப்பாயாக!

எங்களின் கவலைகளை போக்குவாயாக!
எங்கள் நோய்களை குணப்படுத்துவாயாக!
எங்கள் குடும்பத்தில் மறைந்து விட்டவர்களின் மீது இரக்கம் காட்டுவாயாக!

இய்யாக்க நஃபுது
வ இய்யாக நஸ்தயீன்

யா அல்லாஹ்!  எனக்கு  வேதனை ஏற்படுத்தும் அனைத்தையும் எனக்கு  நலன் பயப்பதாக மாற்றுவாயாக!
என்னை கவலையில்
ஆழ்த்தும் அனைத்திலும் நன்மையை உருவாக்குவாயாக!
 எனக்குக் கிடைக்காமல் நீ தடுத்த அனைத்திலும் எனக்கு நன்மையை ஏற்படுத்தித் தருவாயாக!
ஆமீன்


Wednesday, August 28, 2019

சிரமங்கள்,சங்கடங்கள் ஏற்படும் போது நபியவர்கள்ﷺ ஓதியது

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 
லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் 

 அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ
عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ 

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.

   யா அல்லாஹ் !நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை. 

(ஆதாரம் : அபூதாவூத்,அஹ்மத்)

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ 
லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன்

   வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

(ஆதாரம் : திர்மிதி)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
அல்லாஹு அல்லாஹு ரப்பி லா உஷ்ரிக் பிஹி ஷைஆ

  அல்லாஹ்! அல்லாஹ்வே என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன். 

(ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா)